Thursday, September 11, 2008

ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமி (கருவறையினுள்)

வலது திருக்கரம் சாட்டையைத் தாங்கும் பாவனையில்..
இடக்கரம் காட்டுவது ‘கோ ஸ்பர்ச முத்ரை’, ஆ மருவி நிற்கும் திருக்கோலம். வர்ண கலாபத்துடன் கூடிய திருமேனி !

Friday, August 29, 2008

”மன்னார்” திருக்கோவில்கள்

கண்ணபிரான் இடது திருக்கரத்தால் பசுவை அணைத்துக்கொண்டு, வலது திருக்கரத்தால் சாட்டையைச் சுழற்றும் பாவனையில் ‘வேத்ர பாணி’யாக, நின்ற திருமேனியோடு ஸேவை ஸாதிக்கும் திருக்கோலம் “மன்னார்” என்றழைக்கப் படுகிறது.

தமிழகத்தில் இத்தகைய கோலத்தில் கோபாலன் எழுந்தருளியிருக்கும் தலங்கள் மிகவும் அபூர்வமானவை.

“ஸ்ரீ வில்லிபுத்தூர்” – ஆண்டாள் ஆலயத்தில் மூலவர் ‘ரங்க மன்னார்’.
பெரியாழ்வாரும், நாச்சியாரும் அவதரித்த திருத்தலம். ரங்க மன்னாரின் இரு மருங்கிலும் நாச்சியாரும், கருட பகவானும் காட்சி தருகின்றனர்.
மங்களாசாஸனம் பெற்ற இத்தலம் குறித்து அனைவருமே நன்கறிவர்.

“மன்னார் கோவில்” – இது குலசேகராழ்வாரின் அபிமானத்தலம். அவர்தம் திருவரசை (ஸமாதி) இங்கு காணலாம். நெல்லை மாவட்டத்தில் ஆழ்வார் குறிச்சியிலிருந்து அம்பாசமுத்ரம் செல்லும் சாலையில் இவ்விண்ணகரம் அமைந்துள்ளது.

“காட்டுமன்னார் கோவில்” - இது சோழவள நாட்டில் அமைந்துள்ளது.
‘காளம் வலம்புரியன்ன நற்காதல் அடியவர்க்குத்
தாளம் வழங்கித் தமிழ்மறை இன்னிசை தந்த...’
ஸ்ரீமந்நாத முனிகள் அவதரித்த திருத்தலம் இது.

“ராஜமன்னார் குடி” - ஹரித்ரா நதிக்கரையில் ஒரே வஸ்த்ரத்தை அரையில் ஆடையாகவும், சிரசில் தலைப்பாகையாகவும் அணிந்துகொண்டு ஒய்யாரமாக
கோபிலர், கோப்ரளயர் ஆகிய முனிவர்களுக்குக் காட்சி தந்த திருக்கோலம்.
இது ஸ்வாமி மணவாள மாமுனிகளின் அபிமானத்தலம். பேரறிஞர் பலர் வாழ்ந்த ஊர். ‘மன்னார்குடி மதிலழகு’ என்று கொண்டாடும் பெருமை படைத்தது.

“மேலப்பாவூர்” – ‘பாகூர் ராஜகுலராம சதுர்வேதி மங்கலம்’ என்பது கல்வெட்டுத் தெரிவிக்கும் பெயர்.
ப்ருகு, மார்க்கண்டேய முனிவர்களுக்குக் காட்சி தந்த திருக்கோலம்.
மூலவர் “அழகிய மன்னார்”. மேற்குப் பகுதியில் அமைந்த இவ்வாலயம் ‘மேற்குத்தளி’, ‘மேற்கு விண்ணகரம்’ என்னும் பெயர்களைக் கொண்டது.
பிற்காலப் பாண்டிய மன்னர்களின் திருப்பணி.

கண்ணபிரான் யதுகுலத்தில் தோன்றி, கோகுலத்தில் வளர்ந்தருளினான்.
ஆநிரை மேய்த்தாலும் அரசர்க்குரிய காம்பீர்யம் சற்றும் குறையவில்லை.
அடியவர்கள் ‘ராஜ கோபாலன்’ என்றழைத்து இன்புற்றனர்.

இது போன்று வெளியுலகம் அறிந்திராத ஒரு சில மன்னார் கோவில்கள்
இன்னும் இருக்கலாம்.

Monday, August 25, 2008

அருள்மிகு ஸ்ரீ ராஜகோபாலஸ்வாமி திருக்கோவில்

திருவுக்கும் திருவாகிய செல்வனாகிய மாலவன் மகிழ்ந்து இனிதுறையும் திருத்தலங்களுள் ஒன்று நெல்லை மாவட்டம்,தென்காசி வட்டத்தில் இருக்கும் மேலப்பாவூர் கிராமம்.

ஆலயத்தின் மூலவரின் திருநாமம் “அழகிய மன்னார்”; கிழக்கு நோக்கிய திருமுகமண்டலம்; சுதைச் சிற்பம்; ஸ்ரீ தேவியும், பூதேவியும் இரு
மருங்கிலும் திகழ்கின்றனர்; பிருகு முனிவரும், மார்க்கண்டேயரும் வழிபட்ட திருத்தலம்.

அழகிய திராவிட பாணியில் அமைந்துள்ள இந்த ஆலயம் தென்காசிப் பாண்டியர்கள் காலத்தைச் சேர்ந்தது. கல்வெட்டுக் குறிப்புகளின்படி இந்த ஆலயம் கி.பி 1545 ல் ஜடில வர்மன் என்ற பராக்ரம பாண்டியனால் புனரமைக்கப் பட்டது . இம்மன்னன் அபிராம பராக்ரம பாண்டியனின் புதல்வனாவான். ஆலயத்தினுள் காணப்படும் இரு கல்வெட்டுகள் இவற்றை அறிந்துகொள்ள உதவுகின்றன.
இத்தகவல்களை உறுதி செய்து சான்றிதழ் அளித்திருப்பவர் –

Dr. M.D.Sampath, M.A., Ph.D.
Director of எபிக்ரப்தி
MYSORE – 570 017

அன்பர்கள் பெருமுயற்சி செய்து சுதை வேலைகளை நிறைவேற்றியுள்ளனர். இதுகாறும் ரூ.5 லக்ஷம் மதிப்பிலான பணிகள் நிறைவேறியுள்ளன. திருமதில், தளவரிசை, ஆழ்துழாய்க்கிணறு, கொடிமரம், மஹா ஸம்ப்ரோக்ஷணம் போன்ற செலவுகளுக்கும், நிரந்தர வைப்பு நிதிக்குமாக ரூ.20 லக்ஷம் தேவைப் படுகிறது. 80-G வரிச்சலுகை புதுப்பிக்கப்பட உள்ளது. அன்பர்கள் அனைவரையும் பங்கு கொள்ளுமாறு பணிவுடன் அழைக்கிறோம்.

திருப்பணிக்குழுப் பொறுப்பாளர்கள் –

திரு.D.ராமகிருஷ்ணன்
49/103 B, தெற்கு மாசி வீதி
தென்காசி – ௬௨௭ 805
திரு. P. வேங்கடராமன்
66, அக்ரஹாரம்
மேலகரம் – 627 818

வங்கிக் கணக்கு எண் –
S.B A/C No.15055 I.O.B TENKASI BR.
S.B A/c No.609001001101 Sri Ramabajana Sabha Melappavur Br.

மின்னஞ்சல் தொடர்பு – R.தேவராஜன்/சென்னை
rdev97@gmail.com